மோடியின் இந்தியா:அம்பானிக்கு 5000கோடியில் வீடு 10கோடியில் கார்..!

ambani car

ஜெர்மனியிருந்து இறக்குமதி செய்து வரியுடன் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள குண்டு துளைக்காத பிஎம்டபுள்யூ காரை வாங்கி உள்ளார் முகேஷ் அம்பானி.

ஆகப்பெரும்பாண்மையான மக்கள் வறுமையில் வாடும் இந்தியாவில் தான் உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை. அதிகமாம். அதன் ஒரு வக்கிர குறியீடு தான் முகேஷ் அம்பானி.

ஏற்கனவே மும்பை சேரி மக்கள் அருகில் 5000 கோடிக்கு 27 மாடி 600 பணியாட்களுடன் வீட்டை கட்டி குடியிருக்கும் முகேஷ் அம்பானி தற்போது தனது பாதுகாப்பு கருதி 10 கோடி மதிப்புள்ள காரை வாங்கி உள்ளார்.

வீடு இல்லாமல் சாலை உறங்கி சல்மான்கான் காரில் பரலோகம் போகும் கோடிக்கணக்கான இந்திய ஏழைகள் வாழும் நாட்டில் தான் இத்தகைய அசிங்கங்கள் நடக்க முடியும்.

வரிச்சலுகை, விவசாய நிலம், எண்ணெய் வயல்கள், 2ஜி 3ஜி தொலைத்தொடர்பு என அனைத்து வளங்களையும் தாரை வார்த்து 2 லட்சம் விவசாயிகளை பலிகொடுத்ததன் பயன் தான் இந்த அம்பானி,அதானி போன்ற கார்ப்பரேட்களின் சொர்க்க வாழ்க்கையாக வளர்ந்து நிற்கிறது.

இப்படி அம்பானியின் வளர்ச்சிக்கு அரசை நடத்தும் ஆளும் வர்க்க மோடி போன்றோர்கள் அடிக்கடி ஏழைகள் ஆட்சி, உங்கள் பணம் உங்கள் கையில், கருப்பு பணத்தை மீட்டு நாட்டை சொர்க்கமாக்குவேன் என வீரவசன்ம் பேசுவது தான் தாங்க முடியலை.

நாடு ஒரு இறுதிகட்ட போருக்கு தயாரிவருகிறது என்பது அம்பானியின் வளர்ச்சியும், விவசாயிகளின் போராட்டமும் காட்டுகிறது.

3 Comments

Leave a comment