அரசு சாராயக்கடையினை மூட முடியாது என போராடும் அரசை உலகில் வேறொங்கும் பார்க்க முடியாது.
இதோ தனது பாலிடெக்னிக் படிக்கும் மகன் குடிகாரனாகி தொந்தரவு கொடுப்பதை பொறுக்காமல் அவனை வெட்டி கொன்ற செய்தியை கடந்த வாரம் பார்க்க முடிந்தது.
குழந்தைகளுக்கு மது கொடுப்பது, மாணவர்கள் போதையுடன் வருவது ஒரு புறம் என்றால் குடியால் தந்தையை, மகனை , நண்பனை கொலை செய்வது தொடர்ந்து வருகிறது.
நீ எவனுக்கு ஓட்டுபோட்டாலும், காசு வாங்கிட்டோ, காசு வாங்காமலோ…
சகாயம் போதையிலோ போய் ஓட்டுப்போட்டாலும் அது இந்த டாஸ்மாக் அரசை அங்கிகரிப்பது என்று தான் சொல்ல முடியும்.
குற்றத்தை அங்கீகரித்துவிட்டு பின் அதனிடம் நேர்மையினை எதிர்பார்ப்பது எப்படி..?
பணம் வாங்காமல் போனால் மட்டும் வாக்கு இயந்திரத்தில் கக்கனா தெரியப்போகிறார்..?
கொலைகாரனை ஆதரிக்கும் பாதுகாக்கும் கொலைகாரர்களாக நீங்கள் மாறி வருகிறீர்கள் என்பதை உணர முடிகிறதா?